சேலம்: பலரிடம், 91 பவுன் நகைகளை வாங்கி மோசடி செய்ததாக, பெண் மீது, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. சேலம், அமானிகொண்டலாம்பட்டியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த மனு: அரசமரத்துக்காட்டூரை சேர்ந்தவர் சபீனா, 26. இவர், கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிவதாக கூறினார். அவர், அரசின் திட்டங்களில், நகைகளை முதலீடு செய்தால், மானியத்துடன் கடன் பெறலாம் என்றார். அதற்காக, ஒரு பவுன் நகையை கொடுத்தால், ஒரே மாதத்தில், ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பதாக தெரிவித்தார். அதை நம்பி, எங்கள் பகுதியை சேர்ந்த காஞ்சனா, 16 பவுன், திலகவதி, 30 பவுன், மகாலட்சுமி, 16 பவுன், சிவக்குமார், 8 பவுன், விஜயா, 16 பவுன், மேலும், மூன்று பெண்கள் என, 91 பவுன் நகைகளை சபீனா வாங்கினார். சிலர், தங்கள் நகைகளை அடகு வைத்துள்ளதாக தெரிவித்த நிலையில், அவர்களை அழைத்துச்சென்று, வங்கி, நிதி நிறுவனங்களில் அவரே பணம் செலுத்தி, நகைகளை எடுத்துக்கொண்டார். நகைகளை வாங்கிய அவர், வீட்டை காலி செய்து விட்டு சென்றார். அவரிடம் இருந்து, நகைகளை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, சபீனாவின் கணவர், ரங்கநாதனிடம் நகைகளை பெற்றது குறித்தும், சபீனா, கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிவது உண்மையா எனவும், கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE