தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், வருவாய்த்துறை சார்பில், 197 வி.ஏ.ஓ.,க்களுக்கு லேப்டாப்புகளை அமைச்சர் அன்பழகன் வழங்கினார். கலெக்டர் கார்த்திகா தலைமை வகித்தார். 197 வி.ஏ.ஓ.,க்களுக்கு லேப்டாப்புகளை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் அன்பழகன் வழங்கி பேசியதாவது: இணையவழியில் சான்றிதழ் வழங்கல் உள்பட, பல்வேறு அரசு சேவைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. மக்களுக்கு தேவையான ஜாதி, வருமானம், இருப்பிடம், வாரிசு சான்றுகள், விதவை, கலப்புதிருமண சான்று, சொத்து மதிப்பு, சிறு, குறு விவசாயி, பட்டா மாறுதல் சான்று உள்பட, 22 வகையான சான்றுகள் அனைத்தும் இணையவழியாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில், வீட்டுமனை இல்லாதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கிட, அடுத்த மாதம் தகுதியான அனைவருக்கும், வீட்டுமனை பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். எம்.எல்.ஏ.,க்கள் (பாப்பிரெட்டிபட்டி) கோவிந்தசாமி, (அரூர்) சம்பத்குமார், சப்-கலெக்டர் பிரதாப் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE