அரூர்: தீபாவளி, கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அரூர், கடைவீதியில் போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சாலை நடுவில், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டம், அரூர் கடைவீதியில் இருந்து, சந்தைமேடு வரை, வணிக நிறுவனங்கள், ஜவுளி மற்றும் நகை கடைகள் உள்ளன. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை, பட்டாசு, பூஜை பொருட்கள் போன்றவற்றை வாங்க, கடந்த சில நாட்களாக மக்கள் அதிகளவில் வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், நேற்று முதல், கடைவீதியில் இருந்து, மாரியம்மன் கோவில் தெரு வரை, சாலையின் நடுவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், நான்குசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் திருட்டு, நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE