பொம்மிடி: தீபாவளியை முன்னிட்டு, பொம்மிடி சந்தையூர் வாரச்சந்தையில், 55 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின. தர்மபுரி மாவட்டம், பொம்மிடி சந்தையூர் வாரச்சந்தைக்கு, தீபாவளியை முன்னிட்டு நேற்று, 650க்கும் மேற்பட்ட செம்மறி, வெள்ளாடுகளை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆடுகளை வாங்க சேலம், ஓமலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், கடத்தூர் உள்ளிட்ட, பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 6,500 முதல், 6,800 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், ஒவ்வொரு ஆடும், 400 ரூபாய் முதல், 700 ரூபாய் வரை அதிகரித்து, கூடுதல் விலைக்கு விற்பனையானது. சந்தையில், 55 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE