ஓசூர்: சூளகிரி அடுத்த, கோனேரிப்பள்ளி அருகே கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ராஜ், 30; விவசாயி. இவர் கடந்த, 10ல், ஓசூர் - கிருஷ்ணகிரி சாலை சப்படியில், வளைவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார், அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வெங்கட்ராஜை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று முன்தினம் இறந்தார். சூளகிரி இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE