செங்கம்: செங்கம் அருகே, இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியானார். மூன்று பேர் படுகாயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டகுளத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி, 35, இவர் மனைவி செல்லம்மாள், 28, இவர்களது மகன் ஆகாஷ், 10, என, மூன்று பேரும் நீப்பத்துறை கிராமத்தில், உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு, பஜாஜ் பைக்கில் சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு வீடு திரும்பினர். மேல்ராவந்தவாடி அருகே வந்தபோது, எதிரே ஆண்டிப்பட்டி ஏழுமலை, 45, என்பவர் ஓட்டி சென்ற பைக் நேருக்கு நேர் மோதியது. இதில், படுகாயமடைந்த ஜெயமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். செல்லம்மாள், ஆகாஷ், மற்றும் ஏழுமலை ஆகிய மூவரும் படுகாயமடைந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேல் செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE