நாமக்கல்: தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 30 காசு உயர்ந்து, 470 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, விற்பனை நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். அதையடுத்து, 440 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 30 காசு உயர்த்தப்பட்டு, 470 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நுகர்வு அதிகரித்துள்ளதால், கொள்முதல் விலை, ஒரே நாளில், 30 காசு உயர்ந்துள்ளது.
நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 480, ஐதராபாத், 466, விஜயவாடா, 468, பர்வாலா, 481, மும்பை, 501, மைசூரு, 485, பெங்களூரு, 485, கோல்கட்டா, 530, டில்லி, 490. கிலோ, 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி விலையிலும், கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE