புதுடில்லி: இந்தியாவில், கொரோனா பாதித்தவர்களில் 81,15,580 பேர் நலமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் நேற்று (நவ., 12) மட்டும் 44,878 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87,28,795 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 547 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் 1,28,668 ஆக உயர்ந்தது.

தற்போது, 4,84,547 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 49,079 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 81,15,580 ஆக அதிகரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE