சென்னை: -சென்னையில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும், ஒன்பது சிறப்பு ரயில்களில், விழா காலத்தையொட்டி, நேற்று முதல், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுள்ள, ௧௩ கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன.
* சென்னை எழும்பூரில் இருந்து, செங்கோட்டைக்கு இயக்கப்படும், வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலில், நான்கு; கேரள மாநிலம், கொல்லத்துக்கு தினமும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலில், ஒரு பெட்டியும் கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளன
* சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு, வாரம் இரண்டு நாட்கள் இயக்கப்படும் சிறப்பு ரயிலில், ஆறு பெட்டிகள்; கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் செங்கோட்டைக்கு தினமும் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், தலா ஒரு பெட்டியும் இணைத்து இயக்கப்பட உள்ளன
* எழும்பூர் -- காரைக்குடி சிறப்பு ரயிலில், இரண்டாம் வகுப்பு சேர் கார் பெட்டி ஒன்றும், தஞ்சையில் இருந்து, எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலில், இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டி ஒன்றும் கூடுதலாக இணைத்து இயக்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE