சென்னை: ''பட்டாசு வெடிக்கும் போது, 'சானிடைசர்' பயன்படுத்தாமல், சோப்பு பயன்படுத்தி, கை கழுவ வேண்டும்,'' என, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி கூறினார்.
இது குறித்து, வசந்தாமணி கூறியதாவது:சானிடைசரில், 'ஆல்கஹால்' இருப்பதால், எளிதில் தீ பற்றக்கூடியது. எனவே, பட்டாசு வெடிக்கும் இடங்களில், சானிடைசர் வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், பட்டாசு வெடிக்கும் போது, சானிடைசர் பதிலாக, சோப்பு பயன்படுத்தி, கைகளை நன்றாக கழுவ வேண்டும்.சிறார்கள், பெற்றோர் கண்காணிப்பில் மட்டுமே, பட்டாசுகள் வெடிக்க வேண்டும். அப்போது, தண்ணீர், மண் குவியலை அருகில் வைத்திருக்க வேண்டும். எதிர்பாரதவிதமாக தீக்காயங்கள் ஏற்பட்டால், உடனடியாக குளிர்ந்த நேரில் வைக்க வேண்டும். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், சிறப்பு வார்டு துவக்கப்பட்டு, 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்ஸ்கள் பணியில் ஈடுபடுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE