குளித்தலை: தோகைமலையில், பட்டாசு கடைகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். குளித்தலை அடுத்த, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கழுகூர், கொசூர், சின்ன ரெட்டிப்பட்டி, தெலுங்குபட்டி, ஆலத்தூர், ஆர்.டி., மலை உள்ளிட்ட பகுதிகளில், தற்காலிக அனுமதி பெற்றுள்ள பட்டாசு கடைகளை, தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா, தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா, பட்டாசுகள் வாங்க வரும் மக்களுக்கு கொரோனா பரவலை தடுக்கும் வகையிலான நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்யப்பட்டது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பட்டாசு கடைக்காரர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE