கரூர்: கரூர் மக்கள் பாதை சாலையில், இரட்டை வாய்க்கால் செல்கிறது. மேலும், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் உள்ள வாய்க்காலில் பல இடங்களில் அடைப்புள்ளது. அதிகளவில் செடிகளும் முளைத்துள்ளன. அதை, கரூர் நகராட்சி நிர்வாகம் அகற்றவில்லை. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல இடங்களில் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கழிவுநீர் சீராக செல்லும் வகையில், வாய்க்காலை சுத்தம் செய்ய வேண்டும். இதுகுறித்து, மக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE