கரூர்: 'பழமையான குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட காந்திகிராமத்தில், 40 ஆண்டுகளுக்கு முன், கிணறு அருகில் தொட்டி கட்டி, அதில், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டதால், குடிநீர் தொட்டி பயன்பாடற்ற நிலையில் உள்ளது. மேலும், தொட்டியின் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் தெரிந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. அதன் அடிப்பகுதி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. இதனருகே விநாயகர் கோவில், அரசு தொடக்க பள்ளியும் செயல்பட்டு வருகிறது. எனவே, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், குடிநீர் தொட்டியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE