குமாரபாளையம்: குமாரபாளையத்தில், 25 மாற்று திறனாளிகளுக்கு பொதுநல அமைப்பினர் உதவினர். குமாரபாளையம், 'விடியல் ஆரம்பம்' பொதுநல அமைப்பின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி, 25 மாற்று திறனாளிகளுக்கு அரிசி ஒரு சிப்பம் மற்றும் இனிப்புகள் வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டும், காவேரி நகர், இந்திரா நகர், சேலம் சாலை, கிழக்கு காலனி, பெராந்தர்காடு, நடராஜா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 25 மாற்றுதிறனாளி களுக்கு அவர்கள் இருக்கும் இடம் தேடி சென்று அரிசி ஒரு சிப்பம், இனிப்புகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் ஜீவா, தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE