புதுடில்லி : லடாக்கின் லே பகுதியை இந்திய வரைபடத்தில் தவறாக காண்பித்த விவகாரத்தில் டுவிட்டருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதை சுட்டிக்காட்டி இந்தியாவில் டுவிட்டரை தடை செய்ய வேண்டும் என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.
சமூகவலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை இந்தியா உட்பட உலகம் முழுக்க உள்ள மக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் லடாக்கின் லே பகுதியை ஜம்மு- காஷ்மீருக்கு உட்பட்டது போன்று, வரைபடத்தில் தவறுதலாக காண்பித்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி டுவிட்டர் நிர்வாகத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் லே பகுதி சீனாவில் இருப்பது போன்றும் வரைபடம் வெளியிட்டு இருந்தது. இதற்கு பதிலளித்த டுவிட்டர் நிர்வாகம், தவறை திருத்திக் கொள்வதாக தெரிவித்தது. ஆனால் இன்னமும் சரி செய்யவில்லை. இதையடுத்து, இந்திய இறையாண்மையின் மதிப்பை குறைக்கும் வகையில் டுவிட்டர் செயல்பட்டதாக கூறி டுவிட்டர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து 5 நாட்களுக்குள் டுவிட்டர் பதிலளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசின் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து டுவிட்டருக்கு எதிராக டுவிட்டரில் பலரும் குரல் கொடுத்தனர். இந்திய வரைபடத்தை தவறாக சுட்டிக்காட்டிய டுவிட்டரை இந்தியாவிலும் தடை செய்ய வேண்டும் என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதன்காரணமாக டுவிட்டரில் #TwitterBanInIndia என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. ஒருவேளை இந்தியாவில் டுவிட்டர் தடை செய்யப்பட்டால் என்னவாகும் என்பதையும் பலர் கேலிச்சித்திரங்களாகவும், மீம்ஸ்களாகவும் வெளியிட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE