சென்னை,: தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே, நவ. 16- தேதிக்கு பிறகும் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து சேவையை தொடர, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டு உள்ளார்.
கொரோனா தொற்றை தடுக்க, தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய, ஊரடங்கு அமலில் உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாநிலங்களுக்கு இடையிலான, பஸ் போக்குவரத்து சேவை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.தீபாவளி பண்டிகையையொட்டி, கர்நாடகா மற்றும் தமிழக மக்கள் வேண்டுகோளை ஏற்று, இம்மாதம், 11ம் தேதி முதல், 16ம் தேதி வரை, கர்நாடகா -- தமிழகம் இடையே, பஸ் போக்குவரத்திற்கு, அனுமதி அளிக்கப்பட்டது.

கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, இரு மாநிலங்களுக்கும் இடையில், தடையின்றி பஸ்களை இயக்க, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு கோரிக்கை விடுத்தார்; பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.
அதை ஏற்று, பணி நிமித்தமாக, மக்கள் சென்று வர வசதியாக, நாளை மறு தினத்திற்கு பிறகும், தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே, அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து சேவையை தொடரும்படி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பொது பஸ் சேவையை பயன்படுத்தும்போது, பொதுமக்கள், அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE