சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.,14) அதிகபட்சமாக சென்னையில் 666 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.99 லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 509 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன்மூலம் அங்கு இதுவரை 2,08,179 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 182 பேருக்கும், செங்கல்பட்டில் 139 பேருக்கும், சேலத்தில் 92 பேருக்கும், திருவள்ளூரில் 91 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 85 பேருக்கும், திருப்பூரில் 76 பேருக்கும், ஈரோடில் 63 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
உயிரிழப்பு
இன்று சென்னையில் 4 பேரும், கிருஷ்ணகிரியில் 2 பேரும், கோவை, ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, வேலுார், விருதுநகரில் ஒருவரும் என 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
டிஸ்சார்ஜ்
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 666 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் அங்கு வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,98,459 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 183 பேரும், செங்கல்பட்டில் 174 பேரும், திருவள்ளூரில் 144 பேரும், சேலத்தில் 106 பேரும், ஈரோடில் 105 பேரும், ராணிப்பேட்டையில் 98 பேரும், திருப்பூரில் 93 பேரும், காஞ்சிபுரத்தில் 71 பேரும், ராணிப்பேட்டையில் 65 பேரும், நாமக்கல்லில் 64 பேரும், திருச்சி, வேலுாரில் 54 பேரும், டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்


தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE