பாட்னா: பாட்னாவில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், பீஹார் முதல்வராக, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். அவர் நாளை (நவ.,16) பதவியேற்க உள்ளார்.

பீஹார் சட்டசபை தேர்தலில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்த முதல்வர் மற்றும் பதவியேற்பு நாள் குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

தேர்தலுக்கு முன்ன தாகவே, கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ் குமார் முதல்வர் பொறுப்பேற்பார் என, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கூட்டணி விதிகளின் கீழ் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி , முதல்வராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

.
பீஹாரின் புதிய முதல்வர் பதவியேற்பு விழா நாளை நடக்கும் என்பதால், அதற்கு முன், விதிமுறைப்படி, முதல்வர் நிதிஷ் குமார், தன் ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைப்பார் என, கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE