பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே டெய்லர் பெண்ணிடம் தாலிசெயின் பறித்து சென்ற நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பி அன்ட் டி காலனியில் வசிப்பவர் பேபி, 68. அதே பகுதியில் டெய்லரிங் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், பேபி தனது டெய்லர் கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, நபர் ஒருவர் நுால்கண்டு கேட்டு வந்தார். பேபி அதை எடுத்த போது, வந்த நபர் பேபியின் கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் தாலி செயினை பறித்து சென்றார். இது பற்றி எஸ்.ஐ., செல்வநாயகம் விசாரிக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE