பந்தலுார்:பந்தலுார் அருகே, சேரம்பாடி பகுதியில் செந்நாய்களால், தொடர்ந்து ஆடுகள் பலியாகி வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.பந்தலுார் அருகே, சேரம்பாடி நாயக்கன்சோலை கிராமத்தில் அதிக அளவிலான விவசாயிகள் கால்நடை வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் முகாமிட்டுள்ள செந்நாய்கள் கால்நடைகளை தொடர்ந்து தாக்கி கொன்று வருகின்றன.கடந்த வாரம் இப்பகுதியில், 9 ஆடுகளை செந்நாய்கள் கடித்து பலியாகின. இந்நிலையில், 'நேற்று முன்தினம் தியாகராஜா என்பவரின், 5- ஆடுகள்; கணபதி என்பவரின், 2- ஆடுகள்; விசுவன் என்பவரின் ஒரு ஆடு,' என, மொத்தம், 8 -ஆடுகள் அருகில் உள்ள புல்வெளியில் மேய்ச்சலுக்குச் சென்று உள்ளன.ஆடுகள் திரும்பி வராத நிலையில், உரிமையாளர்கள் தேடிபார்த்த போது, அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில், 8 ஆடுகளும், செந்நாய் கடித்து பலியாகியது தெரியவந்தது. வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு,'பாதிக்கப்பட்ட ஆடுகளின் உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்,' என, தெரிவித்தனர்.மக்கள் கூறுகையில்,'இப்பகுதியில், கடந்த சில நாட்களில், செந்நாய் வேட்டைக்கு, 17 ஆடுகள் இதுவரை பலியாகி உள்ளன. இவைகள், மனிதர்களை தாக்கும் முன்பு, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE