கூடலுார்:கூடலுார், நாடுகாணி அருகே, ஆட்டோ மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.கூடலுார் ஆமைகுளம் பகுதியை சேர்ந்தவர் பிரதீபன், 28. இவரும் அதே பகுதியை சேர்ந்த சசிக்குமாரும், 23, நேற்று முன்தினம், நாடுகாணி நோக்கி இருசக்கர வாகனத்தில் பயணித்தனர்.நாடுகாணி பெட்ரோல் பங்கு அருகே, ஆட்டோ மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. பைக்கில் பயணித்த இருவரும் காயமடைந்தனர்.பிரதீபன், கூடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, வழியில் உயிரிழந்தார். காயமடைந்த சசிக்குமார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து தேவாலா போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE