கூடலுார்:கூடலுார், பந்தலுார் பகுதிகளை சேர்ந்த பழங்குடியினருக்கு ஆதிதிராவிடர் மற்று பழங்குடியினர் நலத்துறை சார்பில், 150 கறவை மாடுகள் வழங்கப்பட்டன.கூடலுார், பந்தலுார் பகுதிகளில் வசிக்கும், பழங்குடி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், இலவச கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று, தொரப்பள்ளி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மெரினா தலைமை வகித்து பழங்குடியினருக்கு இலவச கறவை மாடுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், அதிகாரிகள் பழங்குடிமக்கள் பங்கேற்றனர்.அப்பகுதியினர் கூறுகையில்,'பள்ளி வளாகத்தில் மாடுகள் இறக்கி நிறுத்தப்பட்டதால், அங்கு சுகாதார பாதிப்பு அபாயம் உள்ளது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE