கோவை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில், 32 கோடி ரூபாய்க்கு,மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.கோவையில் வடக்கு, தெற்கு என்ற இரு பிரிவுகளின் கீழ், 299 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 'குடி'மகன்கள் கொரோனா தொற்று அச்சமின்றி முந்தியடித்துக்கொண்டு, மதுபாட்டில்களை அள்ளிச்சென்றனர்.மாவட்டத்தில் மட்டும், கடந்த 13ம்தேதி 17 கோடி ரூபாய்க்கும், 14ம் தேதி 15 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது. கோவை மண்டலத்தில் கடந்த இரண்டு நாட்களில், 70 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE