கோவை:முன்விரோதம் காரணமாக ரவுடியை கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜர் நகரை சேர்ந்த ராஜ் மகன் ஜனார்த்தனன், 23. மது குடித்து விட்டு, பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதால், அவரது பெற்றோர் துடியலுார் சாஸ்திரி நகர் பகுதிக்கு குடியேறினர்.கடந்த, 13ம் தேதி ஜனார்த்தனன், ஆர்.எஸ்.புரம் காமராஜர் நகர் பகுதியில், நண்பர்களுடன் தீபாவளியை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், ஜனார்த்தனை கத்தியால் குத்தியது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், ஜனார்த்தனனுக்கு, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த குணா, மாரி, ராஜேஷ் ஆகியோருடன் பழக்கம் இருந்தது. ஜனார்த்தனன் அடிக்கடி இவர்களை மிரட்டி, குடிக்க பணம் பெற்று வந்துள்ளார்.இது தொடர்பான முன் விரோதம் காரணமாக, கொலை நடந்தது தெரிந்தது. குணா, ராஜேஷ்ஆகிய இருவரை கைது செய்த போலீசார், மாரியை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE