கோவை:கார்த்திகை மாதம் மாலை அணிந்து, விரதம் இருந்து சபரிமலை சென்று ஐயப்பனை, பக்தர்கள் தரிசனம் செய்வர். இதற்காக, சித்தாபுதுார் ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து செல்வது வழக்கம்.ஐயப்ப பக்தர்கள் கூறுகையில், 'சபரிமலை செல்வோர், 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்ய வேண்டும். சித்தாபுதுார் ஐயப்பன் கோவில் நிர்வாகம், நெய்அபிஷேகம் செய்துகொள்வதற்கான வசதியை செய்துள்ளது. அதற்கான சிறப்பு பூஜை, கார்த்திகை முதல் நாளில் துவங்கி அன்றாடம் நடைபெறும்' என்றனர்.சித்தாபுதுார் ஐயப்பன் கோவிலில், கார்த்திகை மாதத்தையொட்டி இன்று காலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். மாலை அணிந்து கொள்ள வரும் பக்தர்கள், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாலை அணிவிக்க, கோவில் நிர்வாகத்தினர்அறிவுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE