கோவை:கோவை புரூக்பீல்ட்ஸ் மாலில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரையும் பனிப்பொழிவின் குளிரில் குஷிப்படுத்தும், ஸ்னோ பேன்டஸி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.நோய் தொற்று சூழலை கருத்தில் கொண்டு, ஸ்னோ பேன்டஸி நிறுவனத்தினர் வாடிக்கையாளர்களுக்கு சில விதிமுறைகளையும் வகுத்துள்ளனர். சமூக இடைவெளியை கடைபிடித்தல், நுழைவாயிலில் உடல் வெப்பநிலை மதிப்பீடு, கிருமிநாசினி தெளித்து துாய்மைப்படுத்துதல், காற்றை துாய்மையாக்குதல், பாதுகாப்பு கவசங்களை 70 டிகிரி வெப்பநிலை வரை சூடுபடுத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. புற ஊதாக்கதிரை செலுத்தி துாய்மையாக்குதல், ஷூக்கள், காலுறை, கையுறைகள், போன்றவை ஒவ்வொரு பயன்பாட்டுக்கு பின்பும், மீண்டும் சூடுபடுத்தி, புற ஊதாக்கதிர்களை பயன்படுத்தி துாய்மைப்படுத்தப்படுவதாக, நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE