திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மின்பகிர்மான வட்டங்களில், செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள், செயல்பட்டு வருகின்றன.இங்கு, பணியில் உள்ள அலுவலர்கள், காலை, 8:00 முதல் மாலை, 5:00 மணி வரை பணியில் இருக்கவும், மின் இணைப்பு, மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு, காலை, 8:00 முதல் 10:00 மணி வரை விண்ணப்பம் பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால், பணிக்கு வரும் அலுவலர்கள் சிலர், நேர மேலாண்மையை சரிவர கடைபிடிப்பதில்லை. பெரும்பாலான அலுவலகங்களில், 10:00 மணி கடந்த பின்னரே, அலுவலர்கள் பணிக்கு வருகை புரிகின்றனர். இதனால், விண்ணப்பங்கள் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு, மக்கள், நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.பல்வேறு சேவைகள் ஆன்லைன் வாயிலாகவும், புகார் பிரச்னைக்கு சேவை மையங்களை செயல்படுத்தினாலும், பொதுவாக எழும் சந்தேகங்களுக்கு பதில் கிடைக்காமல், மக்கள் திணறி வருகின்றனர்.எனவே, அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும், 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'மின் அலுவலர் வருகைக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE