அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடைமுறை துவங்கும் போது, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும், குறைந்தது, மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த, போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் மாவட்டம் விட்டு மாவட்டம், பணியிட மாற்றம் செய்யப்படுவர். இதனால், தற்போதே தாங்கள் விரும்பிய ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டால், தேர்தல் நடைமுறை விதி முடியும் வரை, அதே இடத்தில் பணியாற்றலாம் என்ற அடிப்படையில், உயரதிகாரிகள் மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் டிரான்ஸ்பர் பெற முயற்சி செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE