பல்லடம்:பல்லடம் ஒன்றியம், பருவாய் ஊராட்சிக்கு உட்பட்ட, பருவாய் -- ஆறாக்குளம் செல்லும் ரோடு, பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 77 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.இதற்காக ரோடு தோண்டப்பட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும், பணிகள் துவங்காமல் உள்ளன. பொதுமக்கள் கூறுகையில், "இப்பகுதியில் விவசாயம், விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. தொழில் ரீதியாக லாரிகள், வேன்கள் வருகின்றன.ரோடு பணி நடைபெறாததால், இவ்வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம், தாமதம், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ரோடு பணி உடனடியாக நடைபெற வேண்டும்'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE