வாஷிங்டன்; அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வென்றதை, அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக ஒப்புக் கொண்டார்.
ஆனால், மோசடி செய்து வென்றுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 3ல் நடந்தது. நான்கு நாட்கள் இழுபறிக்குப் பின், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான, முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வெற்றியை, அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்றுக் கொள்ளவில்லை. தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வந்தார்.
தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார்.இந்நிலையில், தேர்தலில், ஜோ பைடன் வென்றதாக, டிரம்ப், முதல் முறையாக நேற்று ஒப்புக் கொண்டார். ஆனால், முறைகேடு நடந்ததால், பைடன் வென்றதாக அவர் கூறியுள்ளார்.'தேர்தலில் மோசடிகள் செய்து, ஜோ பைடன் வென்றுள்ளார்' என, சமூக வலை தளத்தில் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE