புதுக்கோட்டை; -புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே கிள்ளனுாரில், நேற்று அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியதாக, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கீரனுார் அருகே, கிள்ள னுார் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன், 34, உட்பட சிலர் சேர்ந்து, கொரோனா தடை உத்தரவை மீறி, அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்திஉள்ளனர்.அதனால், காளை மாடுகளை சித்திரவதை செய்தது உள்ளிட்ட நான்கு சட்டப்பிரிவுகளில், உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், யோகேஸ்வரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE