சேலம்: மூன்றாண்டுகளாக தேடப்பட்ட ரவுடி, தம்பியுடன் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் , மூணாங்கரட்டை சேர்ந்த சகோதரர்கள் பாஸ்கர், 40, ராஜா, 38; பாஸ்கர் மீது, வழிப்பறி, கொள்ளை, கொலை, ஆட்கடத்தல் என, பல்வேறு ஸ்டேஷன்களில், 30 வழக்குகள் உள்ளன.நான்கு முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானவர்.
சில ஆண்டுகளுக்கு முன் தனது முகாமை, கிருஷ்ணகிரி, பெங்களூருக்கு மாற்றினார். அங்கிருந்தபடி கூட்டாளிகள் மூலம் குற்ற செயல்களில் ஈடுபட்டார்.நீதிமன்றங்கள் 'வாரன்ட்' பிறப்பித்த நிலையில், 2017 ஆக., முதல் தேடப்பட்டு வந்தார். பல்வேறு ஸ்டேஷன்களில் வழக்குகள் இருந்ததால், சேலம் மட்டுமின்றி ஈரோடு, நாமக்கல், விருதுநகர், திருப்பூர் மாவட்ட போலீசாரும் தேடி வந்தனர். சேலம் மாநகர போலீசில், மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டார்.
இந்நிலையில் தீபாவளியை கொண்டாட, ஈரோடு மாவட்டம், அந்தியூருக்கு வந்தவரை, சேலம் தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். உடனிருந்த தம்பி ராஜாவும், சிக்கினார். இவர் மீது, ஐந்துக்கும் மேற்பட்ட வழிப்பறி, ஆள் கடத்தல் வழக்குகள் உள்ளன.இவர்கள் கைதை கண்டித்து, சேலம் கலெக்டர் அலுவலகம் முன், உறவினர்கள் தீக்குளிக்க முயன்றனர். இது தொடர்பாக பாஸ்கரின் தாய் மகாலட்சுமி, 62, மனைவி உஷா, 39 மற்றும் உறவினர்கள், 22 - 29 வயதுள்ள ஐந்து பெண்கள் மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE