திருச்சுழி : திருச்சுழி அருகே எர்ரம்பட்டியை சேர்ந்த நடராஜன் மனைவி கருப்பாயி 26. கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு 12.30 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ்சிற்கு தகவல் கொடுத்தனர். ஊழியர்கள் சவுந்திரராஜன், அன்புராஜ் ஆகியோர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயையும் மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரும் நலமாக உள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement