திருச்சி: பஸ் ஸ்டாண்டில் நிறுத்தியிருந்த அரசு பஸ்சை, கடத்திய போதை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கரூரிலிருந்து நேற்று மதியம் திருச்சிக்கு அரசு சிறப்பு பஸ் வந்தது.மத்திய பஸ் ஸ்டாண்டில் பஸ்சை நிறுத்திய டிரைவர் சரவணன், கண்டக்டர் ஆகியோர் அருகிலிருந்த கடைக்கு சென்று டீ குடித்தனர். அப்போது, டிரைவர் சரவணன் தான் நிறுத்திய பஸ்சை, வேறு யாரோ ஒருவர் எடுத்துச் செல்வதை பார்த்து அதிர்ச்சிஅடைந்தனர். உடனே, டிரைவரும், கண்டக்டரும் பஸ்சை பின் தொடர்ந்து ஓடினர்.
இதை பார்த்த போக்குவரத்து போலீஸ்காரர், பஸ் ஸ்டாண்ட்டுக்கு வெளியே காமராஜர் சிலை உள்ள ரவுண்டானா பகுதியில், பஸ்சை மடக்கினார்.போலீஸ் காரரும், அரசு பஸ் ஊழியர்களும் பஸ்சில் ஏறி, டிரைவர் சீட்டில் இருந்தவரை பிடித்து, கண்டோன்மெண்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், திருச்சி, பெரிய மிளகுபாறை பகுதியை சேர்ந்த அஜித், 27, என்பதும், அவர் கஞ்சா போதையில் இருந்ததும் தெரிந்தது.போலீசார் அவரை கைது செய்து விசாரித்து, எச்சரித்து அனுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE