மதுரை: மதுரையில், போக்குவரத்து மிக்க கீழவெளிவீதியில், நேற்று மாலை முருகானந்தம், 24, என்பவர், ஓடஓட விரட்டி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆரைக்குடியை சேர்ந்த முருகானந்தம், போலீஸ் தேர்வுக்கு தயாராகி வந்தார். இதற்காக, மதுரை உத்தங்குடி சோலையம்மன் நகரில் வசித்து வந்தார். நேற்று மாலை, 5:00 மணியளவில் கீழவெளிவீதியில் நடந்து வந்தவரை, காரில் வந்த கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்தது. தலையை துண்டித்து, சர்ச் வாசலில் வீசி விட்டு தலைமறைவானது. தங்களை போலீசார் தேடுவதை அறிந்த கொலையாளிகள், பைபாஸ் ரோடு அருள்நகர் வழியாக சென்றுள்ளனர்.
ஆனால், அது 'முட்டுச்சந்து' என்பதால், காரை அங்கேயே ஆயுதங்களுடன் விட்டு விட்டு தலைமறைவாயினர். கொலைக்கான காரணம் குறித்து, கீரைத்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE