கோவை:விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்த, 12 பேரை போலீசார் கைது செய்தனர்.தமிழக அரசு, தீபாவளி அன்று காலை 6:00 முதல், காலை 7:00 மணி வரையிலும், இரவு 7:00 முதல், இரவு 8:00 மணி வரை மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது. விதிகளை மீறி, குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, எச்சரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தீபாவளியன்று கோவை மாநகர போலீசார் பல்வேறு பகுதிகளிலும் ரோந்து சென்றனர். கோவை காட்டூர் போலீசார் கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், சித்தாபுதுார், வி.கே.கே.மேனன் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த, 12 பேரை பிடித்தனர். அவர்கள் மீது வழக்கு பதிந்த போலீசார் கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE