கோவை:மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது; இரண்டு நாட்களில் கவுன்சிலிங் துவங்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர நடத்தப்படும் கவுன்சிலிங்கில் பங்கேற்க 'நீட்' தேர்வில் வெற்றி பெற வேண்டும். தமிழக மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த, 3ம் தேதி துவங்கி, 12ம் தேதி மாலை வரை நடந்தது.இதன்படி, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.நடப்பாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்காரணமாக இந்தாண்டு, 304 இடங்களுக்கு குறையாமல் எம்.பி.பி.எஸ்., இடங்கள், 91 பி.டி.எஸ்., இடங்கள் என, மொத்தம், 395 மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. தரவரிசை பட்டியல் இன்று வெளியாக உள்ள நிலையில், வரும், 18 அல்லது 19ம் தேதி முதல் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா பரவலை கருத்தில் கொண்டு விசாலமான இடத்தில் கவுன்சிலிங் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு, 500 பேர் வரை கவுன்சிலிங் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE