கோவை:கோவையில் கொரோனா பாதிப்புக்குள்ளான, 253 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை, 45 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.கோவை மாவட்டத்தில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று, 171 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின், எண்ணிக்கை, 46 ஆயிரத்து 408- ஆக உயர்ந்தது.கோவையில் நேற்று கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்தார். மொத்த பலி எண்ணிக்கை, 586 ஆக உள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த, 253 பேர் குணமடைந்தனர். இதுவரை, 44 ஆயிரத்து, 936 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 886 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE