கன்னிவாடி : கன்னிவாடியில் பா.ஜ., கொடிகம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அக்கட்சியினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
டி.புதுப்பட்டியில் பஸ் ஸ்டாப், காளியம்மன் கோயில் அருகில் பா.ஜ.,வினர் கொடிகம்பம் அமைத்திருந்தனர். நேற்று மர்ம நபர்கள் இரு கொடிகம்பத்தை உடைத்து சேதப்படுத்தினர்.இதையடுத்து, மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாக சென்று, கன்னிவாடி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். சென்றனர். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., அசோகன், நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர். மேலும் கொடிகம்பங்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து புகார் அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE