சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விற்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்க உள்ளோம். அவர், யாத்திரையில் பங்கேற்க வாய்ப்பில்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பா.ஜ., சார்பில், சென்னை விமான நிலையத்தில் இருந்து, அரசு நிகழ்ச்சியில், அவர் பங்கேற்கும் இடம் வரை, சமூக இடைவெளியுடன், சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளோம். அரசு விழா முடிந்ததும், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மற்றும் உயர் மட்ட கூட்டத்தில், அமித் ஷா பங்கேற்க உள்ளார். அமித் ஷா வருகை, எங்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக இருக்கும். வெற்றிவேல் யாத்தி
ரையில், அமித் ஷா பங்கேற்க வாய்ப்பில்லை. அமித் ஷா வருகை, எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு, முருகன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE