கொடைக்கானல் : கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகளில் பிடிபட்ட வாகனங்களும், ஆவணங்களும் குவிந்து கிடக்கிறது.சுற்றுலா நகரில் உள்ள ஸ்டேஷன் அண்ணா சாலையில் அமைந்துள்ளது.
வழக்குகளில் பிடிபட்ட இரு சக்கர வாகனங்கள் நுாற்றுக்கணக்கில் பராமரிப்பின்றி குவிந்துள்ளன. ஸ்டேஷனில் நாள் பட்ட ஆவணங்களும் வளாகத்தில் பாதி எரியூட்டப்பட்ட நிலையில் குவியலாக உள்ளது. இவற்றை முறையாக அப்புறப்படுத்தாததால் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இங்குள்ள வாகனங்களை ஏலம் விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE