கன்னிவாடி : கன்னிவாடி பகுதியில் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்குவதில் தொய்வு நீடிக்கிறது.கொரோனாவால் பள்ளிகள் மூடியுள்ளன.
மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்காமல் இருக்க கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ புத்தகங்கள், சீருடை வினியோகம், 2 மாதங்களுக்கு முன் நடந்தது. பல பள்ளிகளில் மொழிப்பாடங்கள் தவிர்த்த பிற புத்தகங்களை வழங்கவில்லை.
ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கில பாட புத்தகங்கள் வழங்கினர். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் புத்தகங்கள் வழங்கவில்லை. கடந்த வாரத்தில் 2ம் பருவத்திற்கான புத்தக வினியோகம் நடந்தபோதும் இதே பிரச்னை நீடிக்கிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE