மேலுார் : மேலுார் ஒரு போக பாசனத்திற்கு உரிய தண்ணீரை குறைத்து வழங்குவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒரு போக பாசனத்திற்கு செப்., 27 தண்ணீர் திறக்கப்பட்டு 50 நாட்களாகியும் இதுவரை கடைமடைக்கு தண்ணீர் செல்லவில்லை. ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒரு போக பாசன கால்வாய்களில் தண்ணீரை குறைத்து தனியாமங்கலம் 9, சருகுவலையபட்டியில் 11 வது பிரிவு கால்வாய்கள் வழியாக 25 கி.மீ., துாரத்திலுள்ள சிவகங்கை மாவட்டத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: கால்வாய்களில் தண்ணீர் குறைப்பு மற்றும் நீர் அளவீட்டு கருவியில் தண்ணீரை அளவிடுவதில் முறைகேடு செய்து சிவகங்கை மாவட்டத்திற்கு பொதுப்பணித்துறையினர் தண்ணீரை கூடுதலாக வழங்குகின்றனர், என்றனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'சிவகங்கை மாவட்டத்திற்கு உரிய பங்கீடு தண்ணீரை மட்டுமே வழங்குகிறோம். ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE