நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு நரியன்ஓடை கரையில் உள்ள பாதாளகாளி மற்றும் பிரத்தியங்காரதேவி கோவிலில் நேற்று முன்னதினம் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி நிகும்பலாயாகம் நடந்தது.
பூஜையை முன்னிட்டு நேற்று மதியம் 2:00 மணிக்கு பிரத்தியங்கரா தேவி மண்டபத்தில் கலசம் ஸ்தாபனம் செய்து, யாக வேள்விகள் ஆரம்பிக்கப்பட்டது.மதியம் 2:30 மணிக்கு மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலாயாகம் நடந்தது. யாக வேள்வியில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலா வந்து பிரத்தியங்கராதேவிக்கு கலச அபிேஷகம் நடந்தது. மதியம் 2:50 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு அபிேஷகம், 3:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பூஜை ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE