வடலூர் : கிணற்றில் விழுந்த கன்றுக் குட்டியை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
வடலுார் அடுத்த வடக்குமேலுார் கிராமத்தில், ராம்குமார் என்பவரின் கன்றுக்குட்டி, நேற்று காலை, 8:00 மணிக்கு, 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு அலுவலர், சங்கர் தலைமையிலான குழுவினர், சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், கிணற்றில் இருந்த கன்று உயிருடன் மீட்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE