விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டும் அவல நிலை உள்ளது.
விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில், ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளில் தேங்கும் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என பிரித்து துாய்மை பணியாளர்கள் எடுத்து செல்கின்றனர்.இந்த குப்பைகளை துாய்மை பணியாளர்கள் சாலையோரத்தில் கொட்டும் அவல நிலை நீடித்து வருகின்றது. இதனால், துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE