கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் அமைத்திக்கூட்டம் நடைபெற்றது.
நாளை (17 ஆம் தேதி) அப்பனந்தல் கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்மடுத்தக் கோரி இந்திய கம்யூ.,கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெறுவதாக அறித்திருந்தனர். இதைத் தொடர்ந்து கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில்,தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் அமைதிக்கூட்டம் நடைபெற்றது.முகையூர் ஒன்றிய பி.டி.ஓ ஞானசீனுவாசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டம் கைவிடுவதாக இந்திய கம்யூ.,கட்சியினர் தெரிவித்தனர்.இதில் இந்திய கம்யூ.,கட்சியினர்,அப்பனந்தல் கிராமபொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE