புதுச்சேரி : மாநிலத்தில் நேற்று கொரோனா தொற்று எண்ணிக்கை 25 ஆக குறைந்துள்ளது.
புதுச்சேரியில் நேற்று 475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், புதுச்சேரி-13; காரைக்கால்--1, மாகி-11 என மொத்தம் 25 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் இதுவரை 36,324 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 34,732 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.695 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 289 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறது.கடந்த நான்கு மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆக குறைந்துள்ளதால், சுகாதாரத் துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE