மயிலம் : மயிலம் அடுத்த அங்கணி குப்பம் கிராமத்தில் எரியாமல் உள்ள ஹைமாஸ் விளக்கை சீரமைக்கவேண்டும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மயிலம் ஒன்றியம் கணபதிபட்டு ஊராட்சியில் உள்ள சிற்றூர் அங்கணி குப்பம் கிராமம். இந்த ஊரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தின் மையப்பகுதியில் ரேஷன் கடைக்கு மிக அருகில் ஹைமாஸ் விளக்கு அரசு செலவில் அமைக்கப்பட்டுள்ளது.கணபதிபட்டு வீடூர் டேம் சாலை மிக இருட்டாக உள்ள நேரத்தில் இது பயனுள்ளதாக இருந்தது. மேலும் இந்த பகுதிக்கு வந்து செல்லும் மக்கள் இதனால் பயன் பெற்று வந்தனர். தற்போது நீண்ட நாட்களாக இந்த ஹைமாஸ் விளக்கு எரியாமல் பழுதடைந்து உள்ளது. எனவே அதிகாரிகள் இதை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE