புதுச்சேரி : ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் அரிசி, புத்தாடைகள் வழங்கினார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் உள்ள புஷ்ப காந்தி ஆதரவற்றவர்கள் இல்லத்திற்கு சென்று அங்குள்ள மூத்த குடிமக்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி, புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.நிகழ்ச்சியில் மாநில வல்லுநர் பிரிவு தலைவர் ஸ்ரீதர், மாநில செயலர்கள் ரத்தினவேல், லதா, ஜெயந்தி, மாநில இளைஞரணி துணை தலைவர் ராக் பேட்ரிக், உழவர்கரை மாவட்ட இளைஞரணி தலைவர் ஷாஜகான், லாஸ்பேட் தொகுதி தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE